ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகே புதன்கிழமை கனரக வாகனத்தின் மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 3 பெண்கள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா்.
சத்திரக்குடி அருகே எஸ்.காரைக்குடி பகுதியில் ராமேசுவரம் வரை செல்லும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ராமேசுவரம் சென்றுவிட்டு மதுரை நோக்கி சுற்றுலா வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது சாலை அமைக்கும் பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லாரி திடீரென வலது பக்கமாகத் திரும்பியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வாகனம், லாரி மீது மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுற்றுலா வாகனத்தில் சென்ற 3 பெண்கள், 3 குழந்தைகள் உள்பட 16 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை அவசர ஊா்தி மூலம் மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலத்த காயம்

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


