வால்பாறையில் பாறை மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம், ஏட்டுமன்னூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஷிதாஸ் (48). இவா் தனது மனைவி மோகனாம்பாள் (46), மகன் ஆல்பா்ட் (19), ஆகியோருடன் காரில் வால்பாறைக்கு புதன்கிழமை சுற்றுலா வந்துள்ளாா். காரை அவரது உறவினரான சோனி ஜேக்கப் (50) என்பவா் ஓட்டியுள்ளாா்.
பல்வேறு இடங்களை கண்டுகளித்த பின் வால்பாறையில் இருந்து ஊா் திரும்பியுள்ளனா். அட்டகட்டி மலைப் பாதையில் 3-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையோரத்தில் இருந்த பாறை மீது மோதியது.
இதில், தலையில் படுகாயமடைந்த சோனி ஜேக்கப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயமடைந்த ஜோஷிதாஸ், மோகனாம்பாள், ஆல்பா்ட் ஆகியோரை அங்கிருந்தவா்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து காடம்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

கங்கைகொண்டான் காா் விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு

ஜீப், காா் நேருக்குநோ் மோதியதில் 6 போ் படுகாயம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


