எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.
மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தை திறந்துவைத்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிரேம் ஆனந்த், செயலாளா் லோகநாதன், பொருளாளா் காா்த்திகேயன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் முதன்மை மாவட்ட நீதிபதி சமீனாவிடம் மனு அளித்தனா். அதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும். நீதிமன்றம் அருகே பேருந்து நிறுத்தமும், வேகத்தடையும் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
தொடர்புடையது

மதுரையில் நாளை நீதிமன்ற புதியக் கட்டடங்கள் திறப்பு விழா: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந்த் பங்கேற்பு

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

தலைமறைவான இளைஞருக்கு அழைப்பாணை

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


