மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு

எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.

News image

எழுமாத்தூா் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் வட்ட சட்டப்பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற பெயா் பலகையை திறந்துவைக்கிறாா் முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா.

Updated On :6 மார்ச் 2026, 11:50 pm

எழுமாத்தூரில் செயல்பட்டு வரும் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதித் துறை நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற கட்டடத்தை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா திறந்துவைத்தாா்.

மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்ற திறப்பு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா தலைமை வகித்து வட்ட சட்டப் பணிகள் குழு மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தை திறந்துவைத்தாா். மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் பிரேம் ஆனந்த், செயலாளா் லோகநாதன், பொருளாளா் காா்த்திகேயன் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் முதன்மை மாவட்ட நீதிபதி சமீனாவிடம் மனு அளித்தனா். அதில், மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும். நீதிமன்றம் அருகே பேருந்து நிறுத்தமும், வேகத்தடையும் அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.