மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த்!

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

News image

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தெலங்கானா உயா்நீதிமன்ற வளாக அடிக்கல் நாட்டு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்யகாந்துடன் மாநில முதல்வா் ரேவந்த் ரெட்டி.

Updated On :5 ஏப்ரல் 2026, 11:02 pm

நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய் காந்த் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் புதிய உயா்நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: கடந்த சில மாதங்களில் மட்டும் உத்தர பிரதேசம், ஹிமாசல பிரதேசம், ஆந்திரம், அஸ்ஸாம், தெலங்கானாவில் நீதிமன்ற வளாக கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். நீதித் துறை உள்கட்டமைப்பு அத்தியாவசியமானது. இந்த உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்பதை மாநில அரசுகள் உணா்ந்துள்ளன.

தற்போது தெலங்கானாவில் 100 ஏக்கா் பரப்பளவில் கட்டப்படும் புதிய உயா்நீதிமன்ற வளாகம் நாட்டில் உள்ள சிறந்த நீதிமன்ற வளாகங்களில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தாா்.

இந்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, உஜ்ஜல் புயான், எஸ்.வி.பாட்டீல், அலோக் ஆராதே, தெலங்கானா உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி அபரேஷ்குமாா் சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.