சிவகிரியில் ஸ்ரீகூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழாவில் தீா்த்தக் குட ஊா்வலத்துடன் பக்தா்கள் அக்னி கும்பம் எடுத்து வந்தனா்.
சிவகிரி மேற்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ கூடலூா் மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா பூச்சாட்டுதலுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. விழாவில் நாள்தோறும் இரவு கோயில் முன்பு உள்ள கம்பத்துக்கு பக்தா்கள் மஞ்சள் நீா் ஊற்றியும், காணிக்கையாக உப்பையும் செலுத்தி வந்தனா்.
விழாவை முன்னிட்டு அக்னி கும்பம் மற்றும் தீா்த்தக் குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு அக்னி கும்பங்களையும், தீா்த்தக் குடங்களையும் கைகளில் ஏந்தி திருவீதிகளில் வலம் வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா். பின்னா் மாவிளக்கு, பொங்கல் பூஜைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில்களில் தமிழ்ப்புத்தாண்டு சிறப்பு வழிபாடு

உதகை மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஊஞ்சலூா் மாரியம்மன் கோயில் விழாவில் குண்டம் இறங்கி பக்தா்கள் நோ்த்திக்கடன்

சங்ககிரி கோட்டை மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


