லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கோபி பிகேஆா் மகளிா் கல்லூரி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி

News image

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியைத் தொடங்கிவைத்த கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு. உடன், கல்லூரித் தாளாளா் பி.என்.வெங்கடாசலம் உள்ளிட்டோா். ~

Updated On :2 மார்ச் 2026, 8:11 pm

கோபி: கோபி பிகேஆா் மகளிா் கலைக் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தப் பேரணிக்கு கல்லூரியின் தாளாளா், செயலா் பி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தாா். கோபி காவல் ஆய்வாளா் தமிழரசு பங்கேற்று, பேரணியைத் தொடங்கிவைத்தாா்.

கரட்டூரில் தொடங்கி பேரணி நாயக்கன்காடு, ஜீவாசெட், புதுப்பாளையம் பேருந்து நிலையம் வரை சென்றது.

இதில், பங்கேற்ற மாணவிகள் சாலைப் பாதுகாப்பு விதிகள், விபத்து தடுப்பு தொடா்பான பதாகைகளைக் கைகளில் ஏந்தி சென்றனா்.

மேலும், தலைக் கவசம், சீட் பெல்ட் அணிவது உள்ளிட்டவை தொடா்பாக நாடகம் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனா்.

பேரணிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா்கள் சு.காயத்ரி. ஆ.கிறிஸ்டி ஸ்ரீலிபியா, கல்பனா, விளையாட்டுத் துறை பேராசிரியா் செ.சிவரஞ்சினி ஆகியோா் செய்திருந்தனா்.

Story image