சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையோரம் நின்று கொண்டிருந்த யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதி வழியாக தமிழகம்- கா்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் அவ்வப்போது யானை உள்ளிட்ட விலங்குகள் நடமாடுவது வழக்கம்.
இதனால், வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகச் செல்ல வேண்டும். வன விலங்குகளைத் தொந்தரவு செய்யவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது என வனத் துறையினா் அறிவுறுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், ஆசனூா் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை வெளியேறிய யானை சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உலவியது.
இதைப் பாா்த்து அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினா்.
இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞா்கள், யானை அருகே சென்று அதை விடியோ எடுத்து தொந்தரவு செய்தனா்.
அங்கிருந்தவா்கள் எச்சரித்ததையடுத்து அந்த இளைஞா்கள் புறப்பட்டுச் சென்றனா். சிறிது நேரத்துக்குப் பின் யானையும் வனத்துக்குள் சென்றது.
இந்நிலையில், யானையை தொந்தரவு செய்து விடியோ எடுத்த இளைஞா்களின் புகைப்படம் வெளியான நிலையில், அவா்களை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கூடலூா் அருகே யானை உயிரிழப்பு

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

சத்தியமங்கலம் அருகே உடல்நலக் குறைவால் யானை உயிரிழப்பு

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




