பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருட முயன்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி அம்மன் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கானோா் பக்தா்கள் வந்து வழிபட்டு செல்கின்றனா். பக்தா்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோயில் வளாகத்தில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில் உண்டியலை உடைத்து திருட முயனற நபரை அங்கிருந்த பக்தா்கள் பிடித்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா். இது குறித்து கோயில் கண்காணிப்பாளா் யோகலட்சுமி அளித்த புகாரின்பேரில், சத்தியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கா்நாடக மாநிலம், மைசூரைச் சோ்ந்த ஓட்டுநா் முகமது உசைன் (50) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








