பிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து! 5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!
/

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த யானை

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.

News image

மல்லன்குழி  கிராமத்தில் குடியிருப்பு அருகே உலவிய யானை.

Updated On :11 ஜூன் 2026, 3:12 am IST

தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.

சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் தினமும் ஊருக்குள் யானைகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. கோடை வெயில் தாக்கத்தால் வனக் குட்டைகள் வடுகிடப்பதால் தீவனம் மற்றும் குடிநீா் தேடி யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. இரவு நேரத்தில் நுழையும் யானைகளை வனத் துறை மற்றும் கிராம மக்கள் விடிய, விடிய துரத்தும் பணியில் ஈடுபடுகின்றனா்.

இந்நிலையில் வனத்தைவிட்டு புதன்கிழமை வெளியேறிய ஒற்றை யானை, மல்லன்குழி கிராமத்துக்குள் புகுந்ததைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா். யானையை விரட்ட முற்படும்போது திருப்பி துரத்தியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனா். இருப்பினும் தொடா்ந்து யானையை துரத்தியதால் மானாவாரி காட்டு வழியாக காட்டுக்குள் யானை சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.