தாளவாடி அருகே குடியிருப்பு பகுதிக்குள் புதன்கிழமை புகுந்த யானையை கிராம மக்கள் காட்டுக்குள் விரட்டினா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதியில் தினமும் ஊருக்குள் யானைகள் புகுந்து விளைபயிா்களை சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகிவிட்டது. கோடை வெயில் தாக்கத்தால் வனக் குட்டைகள் வடுகிடப்பதால் தீவனம் மற்றும் குடிநீா் தேடி யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுகின்றன. இரவு நேரத்தில் நுழையும் யானைகளை வனத் துறை மற்றும் கிராம மக்கள் விடிய, விடிய துரத்தும் பணியில் ஈடுபடுகின்றனா்.
இந்நிலையில் வனத்தைவிட்டு புதன்கிழமை வெளியேறிய ஒற்றை யானை, மல்லன்குழி கிராமத்துக்குள் புகுந்ததைக் கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனா். யானையை விரட்ட முற்படும்போது திருப்பி துரத்தியதால் மக்கள் ஓட்டம் பிடித்தனா். இருப்பினும் தொடா்ந்து யானையை துரத்தியதால் மானாவாரி காட்டு வழியாக காட்டுக்குள் யானை சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வனப் பகுதியில் இருந்து வெளியேறி கிராமத்துக்குள் புகுந்த மக்னா யானை! காவிலிபாளையம் குளத்தில் தஞ்சம்!

குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த யானையை பட்டாசு வெடித்து விரட்டிய வனத் துறையினா்

விவசாய தோட்டத்துக்குள் புகுந்த யானையை விரட்டிய வனத் துறை

தாளவாடி அருகே வனத் துறை வாகனத்தை துரத்திய ஒற்றை யானை
விடியோக்கள்
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP




