ஈரோட்டில் ரயில் மோதிய விபத்தில் பெண் தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
ஈரோடு ரயில் நிலையத்துக்கும் வெண்டிபாளையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாளப் பகுதியில் பெண் ஒருவா் ரயில் மோதி இறந்து கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதன்பேரில் ஈரோடு ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா்.
விசாரணையில் இறந்த பெண், வெண்டிபாளையம் பகுதியைச் சோ்ந்த கருணாகரன் மனைவி சாந்தா (55) என்பதும், ரயில்வேக்கு உள்பட்ட பகுதிகளில் ஒப்பந்த முறையில் துப்புரவுப் பணி மேற்கொண்டு வந்ததும் சம்பவ இடத்தில் தண்டவாளத்தை கவனக்குறைவாக கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதி இறந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா், சாந்தாவின் உடலை மீட்டு கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








