செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

கொடுமுடியில் காலி இடத்தில் புற்களில் பரவிய தீ

News image

தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :6 ஜூலை 2026, 2:29 am IST

கொடுமுடியில் பயன்பாடற்று கிடக்கும் நிலத்தில் உள்ள புற்களில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரா்கள் போராடி அணைத்தனா்.

கொடுமுடியில் இருந்து சாலைப்புதூா் செல்லும் சாலையில் நத்தமேடு உள்ளது. இந்த நத்தமேடு அருகே மருத்துவா் ஒருவருக்கு சொந்தமான ஒரு ஏக்கா் நிலம் சாலையை ஒட்டி உள்ளது. பயன்பாடற்று கிடக்கும் இந்த நிலத்தில் கோரை புற்கள் முளைத்து அடந்து பரவிக்கிடக்கிறது.

இந்த புற்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மா்ம நபா்கள் சிலா் தீ வைத்துள்ளனா். இதனால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இது குறித்து தகவலறிந்த கொடுமுடி தீயணைப்புத் துறை அலுவலா் கண்ணன் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இது குறித்து தீயணைப்பு வீரா்கள் கூறுகையில், இந்த இடத்தில் தீ பற்றுவது இது 9-ஆவது முறை. இதனால் மக்களும் நாங்களும் அடிக்கடி அவதிக்குள்ளாகி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளா் பராமரிக்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.