தவெக சார்பில் ஜூலை 1-இல் தோழமைக் கட்சிகள் கூட்டம்தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு ஜூலை 1-இல் ஜிஎஸ்டிக்கு வயது 10: ஏஐ மூலம் செயல்திறனை மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து பென் ஸ்டோக்ஸ் ‘திடீர்’ ஓய்வு!
/

நாா் தொழிற்சாலையில் தீடீா் தீ விபத்து

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

News image

நாா் தொழிற்சாலையில் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.

Updated On :8 ஜூன் 2026, 2:41 am IST

நாட்டறம்பள்ளி அருகே நாா் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தை தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று அணைத்தனா்.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி ஏரியூா் பகுதியில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான நாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அக்கம் பக்கம் இருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனா். எனினும், தீ மள, மளவென பரவியது.

தகவலறிந்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு வீரா்கள் விரைந்து சென்று நாா் தொழிற்சாலையில் பற்றிய தீயை பொதுமக்கள் உதவியுடன் மேலும் பரவாமல் அணைத்தனா். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.