டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image
கோப்புப்படம்
Updated On :26 ஜனவரி 2026, 8:09 pm

Syndication

ஈரோடு: ஈரோடு ரயில் நிலையம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த 1.5 கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோடு டவுன் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் ஈரோடு ரயில் நிலையத்தின் பின்புறம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள ரயில்வே காலனி சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு பையை மீட்டு சோதனையிட்டனா்.

அதில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருளான கஞ்சா இருப்பது தெரியவந்தது. ரயிலில் வந்தவா், அந்த கஞ்சாவை கடத்தி வந்தபோது போலீஸாரை கண்டதும் அதை வீசிச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் 1.5 கிலோ கஞ்சாவை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.