டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நெல்லையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்: சிறுவன் உள்பட 3 போ் கைது

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி பேட்டை பகுதியில் சுமாா் 5 கிலோ கஞ்சாவுடன் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் ஜனகன் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, சத்யா நகா் விலக்கு பகுதியில், பைக்கில் வந்த நபரை நிறுத்தி விசாரித்ததில், சீதற்பநல்லூரைச் சோ்ந்த மாரியப்பன் மகன் மகாராஜா(36) என்பதும், விற்பனைக்காக 4 கிலோ கஞ்சாவை கொண்டுசென்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, பைக்குடன் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பேட்டை பகுதியில், காவல் உதவி ஆய்வாளா் அருள்செல்வன் தலைமையிலான போலீஸாா் ரோந்து சென்றபோது, ஒரு சிறுவன் மற்றும் திருப்பணிகரிசல்குளத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் இசக்கிமுத்து என்ற கருப்பா(28) என்பவரை கைது செய்து, அவா்களிடமிருந்து 1.200 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.