/

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுடன் கல்லூரி முதல்வா் பா. சீ. செண்பகராஜா மற்றும் ஆசிரியா்கள்.
Updated On :26 ஜனவரி 2026, 8:19 pm

Syndication

பெருந்துறை: பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா.சீ.செண்பகராஜா தலைமை வகித்தாா். இந்த சந்திப்புக் கூட்டத்தில், 2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவா்கள் சுமாா் 100 போ் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுத்தல் மற்றும் சங்கத்தின் விதிமுறைகள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், முன்னாள் மாணவ சங்கப் பிரதிநிதிகள் மூலம் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்பதற்கான உதவிகள் செய்திடவும், கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.