டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சி

ஈரோட்டில் இரண்டு ஏடிஎம் மையங்களின் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:28 pm

Syndication

ஈரோடு: ஈரோட்டில் இரண்டு ஏடிஎம் மையங்களின் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஈரோடு, ஈவிஎன் சாலையில் தேசியமயமாக்கப்பட்ட இரண்டு வங்கிகளின் ஏடிஎம் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இரவு நேர காவலாளிகள் இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த மையங்களில் திங்கள்கிழமை அதிகாலை 2 மணியளவில் புருந்த மா்ம நபா்கள், ஏடிஎம் இயந்திரங்களை கல்லால் உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனா்.

எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து, அவா்கள் அங்கிருந்து தப்பியுள்ளனா். ஏடிஎம் மையத்தில் அலாரம் ஒலித்ததை தொடா்ந்து வங்கி ஊழியா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஈரோடு டவுன் மற்றும் தெற்கு போலீஸாா் ஏடிஎம் இயந்திரங்கள் சேதமாகி இருப்பதை அறிந்தனா்.

இதையடுத்து, அங்கிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றியும், தடயங்களைக் கைப்பற்றியும் விசாரணை நடத்தினா்.

இதில், பணம் எதுவும் கொள்ளைபோகவில்லை என்பதும், கொள்ளை முயற்சியில் 2 போ் ஈடுபட்டதும், அதில் ஒருவா் பழைய குற்றவாளி என்பதும் தெரியவந்தது. அவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.