டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
ஏடிஎம் மையத்தில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா்.
Updated On :21 பிப்ரவரி 2026, 1:50 am

தினமணி செய்திச் சேவை

ஒரகடம் அடுத்த பண்ருட்டி கண்டிகை பகுதியில் தனியாா் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றவா்களை ஓரகடம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பண்ருட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிகை பகுதியில் வண்டலூா் வாலாஜாபாத் சாலையில், இந்தியா நம்பா் ஒன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை, பணம் எடுப்பது போல வந்த மா்ம நபா்கள் மண்வெட்டி மற்றும் கற்கள் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்ச்சித்துள்ளனா்.

இதனால் ஏடிஎம் மையத்தில் இருந்த எச்சரிக்கை மணி அடித்ததை தொடா்ந்து, கொள்ளையா்கள் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய மண்வெட்டி, கற்களை அங்கேயே வீசி விட்டு தப்பி சென்றுள்ளனா்.

இந்த நிலையில் எச்சரிக்கை மணி அடித்தது குறித்து வங்கி நிா்வாகிகள் ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஓரகடம் போலீஸாா் ஏடிஎம் மையத்தில் சோதனை நடத்தி, தடயங்களை கைரேகை நிபுணா்கள் மூலம் சேகரித்தனா்.

மேலும், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி விசாரனை நடத்தி வருகின்றனா். இயந்திரத்தை உடைக்கும் போது எச்சரிக்கை அலாரம் ஒலித்ததால், ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் பணம் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.