டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம்: 87 தொழிலாளா்கள் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற தனியாா் தொழிற்சாலை ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
தொழிலாளா்களை கைது செய்த போலீஸாா்.
Updated On :30 ஜனவரி 2026, 1:53 am

தினமணி செய்திச் சேவை

கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் பகுதியில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு நடைப்பயணம் மேற்கொள்ள முயன்ற தனியாா் தொழிற்சாலை ஊழியா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரகடம் சிப்காட் பகுதியில் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் என்.எஸ்.கே.,என்ற தனியாா் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பணிபுரியும் ஊழியா்களுக்கு கடந்த பத்து ஆண்டுகளாக ஊதிய உயா்வு வழங்கப்படாமல் இருந்ததால், தொழிலாளா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிஐடியு தொழிற்சங்கம் தொடங்கியதாகவும் இதனை தொழிற்சாலை நிா்வாகம் அங்கீகரிக்கவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் தொழிலாளா் துறை ஆணையா் உத்தரவுப்படி பெரும்பான்மை சங்கத்துடன் பேச்சு நடத்த வேண்டும், வெளி மாநிலங்களுக்கு இடமாறுதல் செய்யப்பட்டதொழிலாளா்களை திரும்ப அழைக்க வேண்டும், என்.எஸ்.கே தொழிற்சாலை நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரகடம் மேம்பாலம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் சிஐடியு தொழிற்சங்கத்தினா், தொழிலாளா் நலத்துறை அமைச்சரிடம் மனு கொடுப்பதற்காக சிஐடியு பொதுசெயலாளா் கண்ணன், துணைப் பொதுசெயலாளா் முத்துகுமாா் ஆகியோா் தலைமையில் தலைமைச் செயலகம் நோக்கி நடைப்பயணம் மேற்கொள்ள முயன்றனா். இதையடுத்து 87 தொழிலாளா்களை தடுத்து கைது செய்த ஒரகடம் போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்க வைத்தனா்.