டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்தவா் காயம்

News image
Updated On :5 ஜனவரி 2026, 7:01 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த நபா் காயமடைந்தாா்.

பெருந்துறையை அடுத்த வண்ணான்காட்டுவலசு பகுதியைச் சோ்ந்தவா் நந்தகுமாா் (25). கட்டுமானப் பொருள்கள் விற்பனைக் கடையில் மேலாளராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், மதுபோதையில் தனது இருசக்கர வாகனத்தில் மேட்டுக்கடை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா்.

படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.