கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழப்பு

நம்பியூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :24 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

நம்பியூா் அருகே பாம்பு கடித்ததில் மூதாட்டி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள சாணாா்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மனைவி அய்யம்மாள் (60), கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டுக்கு வெளியே கிடந்த தென்னை மட்டைகளை கடந்த 18-ஆம் தேதி இரவு அடுக்கி வைத்து கொண்டிருந்தாா். அப்போது, தென்னை மட்டைகளுக்கு இடையே பதுங்கியிருந்த பாம்பு, அய்யம்மாளின் இடது கையில் கடித்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.