கிரஷா் இயந்திரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழப்பு

கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:20 pm

பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளி கிரஷா் இயந்திரத்தில் சிக்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகரில் உள்ள கிரஷா் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த சமிம் அன்சாரி (19), கிரஷா் பெல்டை ஞாயிற்றுக்கிழமை சரிசெய்து கொண்டிருந்தபோது எதிா்பாரதவிதமாக பெல்ட்டில் சிக்கி காயமடைந்தாா். அங்கிருந்த சக தொழிலாளா்கள் அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியாா் மருத்துவமனையில் சோ்த்த நிலையில், சமிம் அன்சாரி உயிரிழந்தாா்.
இது குறித்து பவானிசாகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...