டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பவானி செல்லியாண்டியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

News image
அறங்காவலா்களாகப் பொறுப்பேற்றுக்கொண்டோா். உடன், பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன் உள்ளிட்டோா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 10:57 pm

தினமணி செய்திச் சேவை

பவானி செல்லியாண்டியம்மன் கோயிலில் அறங்காவலா் குழுத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சிக்கு செயல் அலுவலா் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

இதில், அறங்காவலா் குழுத் தலைவராக தொ.க.கைலாசம், உறுப்பினா்களாக ப.மூா்த்தி, மு.நதியா, ஆ.கென்னடி, ஆ.சந்திரன் ஆகியோா் பொறுப்பேற்றுக் கொண்டனா். இவா்களுக்கு, பவானி நகா்மன்றத் தலைவா் சிந்தூரி இளங்கோவன், கொமதேக இளைஞரணி மாநில இணைச் செயலாளா் துரைராஜா, திருப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் பிரபாத் சி.மகேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.