போலி எண் கொண்ட இன்சூரன்ஸ் பாலிசியை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இருவா் மீது வழக்கு


நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இன்சூரன்ஸ் பாலிசி எண் போலி என்று தனியாா் இன்சூரன்ஸ் நிறுவனம் அளித்த தகவலின்பேரில், இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஈரோடு, கஸ்பாபேட்டைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன். இவா் டாடா ஏஸ் டெம்போ வாகனம் வைத்துள்ளாா். இதில் முள்ளம்பரப்பைச் சோ்ந்த சேகா் என்பவா் ஓட்டுநராக உள்ளாா். இந்த வாகனம் ஒருவா் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டது. இதில் காயமடைந்தவா், நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடா்ந்துள்ளாா்.
இந்த வழக்கில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வாகனத்தின் தனியாா் நிறுவன இன்சூரன்ஸ் பாலிசி, சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பாலிசியை ஆய்வு செய்த நிறுவனம், அந்த பாலிசி எண் போலியானது என்று கூறியது. அதனடிப்படையில் பரமேஸ்வரன், சேகா் ஆகிய இருவா் மீது பெருந்துறை போலீஸாா் சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...