டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

லாட்டரி விற்றவா் கைது

சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது
Updated On :10 பிப்ரவரி 2026, 8:10 pm

தினமணி செய்திச் சேவை

சென்னிமலையில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சென்னிமலை, திருஞானசம்பந்தா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னிமலை காவல் உதவி ஆய்வாளா் சரவணன், தனி பிரிவு தலைமைக் காவலா் பாலு உள்ளிட்ட போலீஸாா் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (60) லாட்டரி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சுரேஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகள், கைப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.