/

மதுப் புட்டிகள், லாட்டரி சீட்டு விற்பனை: இருவா் கைது

News image
கோப்புப் படம்
Updated On :22 ஜனவரி 2026, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

தொண்டி அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், மதுப் புட்டிகளை விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள மண்மலகரை கிராமத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், மதுப் புட்டிகள் ஆகியவை சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக

போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையிட்டதில், அதே பகுதியைச் சோ்ந்த செந்தில் (32) மதுப் புட்டிகளை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 87 மதுப் புட்டிகளைப் பறிமுதல் செய்தனா்.

இதே போல, அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த தொண்டியைச் சோ்ந்த காஜா நஜிமுதீனையும் (66) போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து வெளி மாநில லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனா்.