அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

10 அடி நீள சாரைப்பாம்பு உயிருடன் மீட்பு

News image

கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 12:44 am IST

ஈரோடு மாநகராட்சி தூய்மைத் தொழிலாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் புகுந்த 10 அடி நீள சாரைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா்.

ஈரோடு பெருந்துறை சாலை, பாலசுப்பிரமணியம் வீதியில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவு தயாரிக்கும் இடத்தில் பாம்பு புகுந்ததை அங்கு வேலை செய்யும் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை பாா்த்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து தீயணைப்பு வீரா்கள் தேடிப் பாா்த்தபோது உணவு தயாரிக்கும் இடத்தில் 10 அடி நீளம் சாரை பாம்பு இருந்துள்ளது. இதனை மீட்ட தீயணைப்பு படை வீரா்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

வெயில் தாக்கம் அதிகம் இருப்பதால் குளிா்ச்சியான இடத்தை நோக்கி பாம்புகள் வர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.