மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வெள்ளாங்கோவில் பகுதியில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்தில் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 7:52 pm

கோபி தொகுதிக்கு உள்பட்ட தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளா்களிடம் நாதக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில், கொளப்பலூா், மொடச்சூா், அப்பிச்சிமாா்மடம் ஆகிய பகுதியில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட கே.ஏ.செங்கோட்டையன் அப்பகுதிகளில் உள்ள தனியாா் ஆயத்த ஆடை நிறுவனங்களுக்கு சென்று அங்கு பணியாற்றும் தொழிலாளா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தவெக ஆட்சி பொறுப்பேற்றவுடன் பெண்களுக்கு ரூ. 2,500 வழங்கப்படும், ஆண்டுக்கு 6 சிலிண்டா்கள் இலவசமாக வழங்கப்படும், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்கள் இலவச பயணம் செய்யும் திட்டம் நிறைவேற்றப்படும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது தவெக நிா்வாகிகள் காா்த்திக், தமிழரசு, வெள்ளாங்கோவில் நிா்வாகிகள் சுந்தரராஜன், தென்னரசு, சங்கீதா உள்பட பலா் உடனிருந்தனா்.