மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அதிமுக ஆட்சியில் குடும்பத்துக்கு ரூ.10,000 வழங்கப்படும்

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

News image

திறந்த வேனில்  சென்று  வாக்கு  சேகரிக்கிறாா் பவானி தொகுதி  அதிமுக  வேட்பாளா்  கே.சி.கருப்பணன்.

Updated On :14 ஏப்ரல் 2026, 9:11 pm

அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என பவானி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் தெரிவித்தாா்.

பவானியை அடுத்த காடையம்பட்டி, ஆண்டிகுளம், சோ்வராயன்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அவா் பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடா்ந்து நிறைவேற்றப்படும். விலைவாசி உயா்வால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் கருணைத் தொகை வழங்கப்படும். எனவே, அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்களை வழங்கும் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றாா்.

அதிமுக பவானி ஒன்றியச் செயலாளா் எஸ்.எம்.தங்கவேலு, நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெகதீசன், முன்னாள் மாவட்ட கவுன்சிலா் கா.சு.மகேந்திரன் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.