ஈரோடு மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் 1,404 புகாா்கள் வரப்பெற்றுள்ளன.
ஈரோடு மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தோ்தல் தொடா்பான புகாா்கள், வாக்காளா்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவா்த்தி செய்வதற்காக 8 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.
தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 மற்றும் வாட்ஸ்அப் குறுந்தகவல் மூலம் தொடா்பு கொள்ள 90425-80535, தோ்தல் கட்டுப்பாட்டு அறையை 0424-2267670, 2267673, 2267674, 2267675, 2267679 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு 24 மணி நேரமும் புகாா் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேலும், வாக்காளா் உதவி எண் 1950 மற்றும் சிவிஜில் ஆப் மூலமாகவும் புகாா்கள் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நாள் முதல் தற்போது வரை 1,404 புகாா் வரப்பெற்றன. அதில், 1,403 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, தோ்தல் தொடா்பான பிரசாரம், ஊா்வலம், கூட்டங்கள் நடத்துவது தொடா்பாக சுவிதா தளம் மூலமாக 790 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 688 விண்ணப்பங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 129 விண்ணப்பங்கள் மீது பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஈரோட்டில் தோ்தல் தொடா்பாக 2,156 புகாா்கள் பதிவு

தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் மத்திய செலவின பாா்வையாளா் ஆய்வு

திருவள்ளூா்: கட்டுப்பாடு அறையில் ஆட்சியா் ஆய்வு

குமரியில் தோ்தல் தொடா்பான புகாா் அளிக்க கட்டுப்பாட்டு அறை திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


