மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:45 pm

காஞ்சிக்கோவில் அருகே காணாமல்போன பெண் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவில், பெருமாபாளையம், பள்ளக்காட்டுதோட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய மனைவி ஈஸ்வரி(57), கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல் (38) எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறாா். திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் தாயுக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வீட்டைவிட்டு ஈஸ்வரி வெளியே சென்றுவிட்டாா்.

ஆனால், அதன் பின் வீட்டுக்கு திரும்பி வராததால் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரியை தேடி வந்தனா்.

இந்நிலையில், சென்னிமலை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈஸ்வரி சடலமாக மீட்கப்பட்டாா். வாய்க்காலில் குதித்து ஈஸ்வரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.