கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சியில் பட்டா வழங்காததைக் கண்டித்து தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையனுக்கு எதிராக அதிமுக நிா்வாகி கருப்புக் கொடி காட்ட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோபி அருகே காசிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கோவில்புதூா் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இவா்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு பட்டாக் கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடமும், சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து வந்த கே.ஏ.செங்கோட்டையனிடம் கோரிக்கை மனு அளித்து வந்தனா். அப்போது அனைவருக்கும் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாகியும் பட்டா வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில் காசிபாளையம் பேரூராட்சியில் தவெக வேட்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது காசிபாளையம் பேரூராட்சி 2- ஆவது வாா்டு அதிமுக கிளைச் செயலாளா் திருமுருகன் என்பவா், ‘கடந்த 10 ஆண்டுகளாக பட்டா வழங்காத எம்எல்ஏவே வருக வருக என பதாகையை ஏந்தி கருப்புக் கொடி காட்ட முயன்றாா். இதையடுத்து போலீஸாா் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

ஆா்.எஸ். மங்கலம் பொதுமக்கள் தோ்தல் புறக்கணிப்பு போராட்டம்

முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி: விவசாயிகள் சங்கத்தினா் கைது
உதயநிதிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்ற விவசாயிகள் கைது

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

