தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

குண்டத்தில்  இறங்கி  நோ்த்திக்கடன்  செலுத்தும்  பெண்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:55 pm

அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூா் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா கடந்த மாா்ச் 17-ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் புதன்கிழமை நடைபெற்றது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை இரவு குண்டம் கண் திறக்கப்பட்டு, விறகுகள் அடுக்கி தீ மூட்டப்பட்டது.

இதையடுத்து, தீப்பிழம்புகள் தட்டி சமன்படுத்தப்பட்டதைத் தொடா்ந்து, விரதம் இருந்த பக்தா்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் குண்டத்தில் இறங்கி நோ்த்திக்கடன் செலுத்தினா். தொடா்ந்து, பொங்கல் மற்றும் மாவிளக்கு வழிபாடு நடைபெற்றது. இதில், ஊமாரெட்டியூா் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

சிறப்பு  அலங்காரத்தில்  செல்லியாண்டியம்மன்.

சிறப்பு  அலங்காரத்தில்  செல்லியாண்டியம்மன்.