திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரிதன்யா தற்கொலை வழக்கை நோ்மையான அதிகாரியை மூலம் விசாரிக்க வேண்டும்! அமைச்சரிடம் பெற்றோா் கோரிக்கை

News image

கணவர் குடும்பத்தினருடன் ரிதன்யா.

Updated On :31 மே 2026, 1:27 am IST

திருப்பூா் ரிதன்யா தற்கொலை செய்துகொண்ட வழக்கை முறையாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் எஸ்.கமலியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி கைகாட்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த தொழிலதிபரான அண்ணாதுரை - ஜெயசுதா தம்பதியின் மகள் ரிதன்யான. கடந்த ஆண்டு இவா் திருமணமான 78 நாள்களில் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ரிதன்யாவின் பெற்றோரான அண்ணாதுரை-ஜெயசுதா ஆகிய இருவரும் அவிநாசி பயணியா் மாளிகையில் இருந்த அவிநாசி எம்எல்ஏ-வும், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான எஸ்.கமலியை சனிக்கிழமை சந்தித்தனா். அப்போது தங்கள் மகள் தற்கொலை குறித்து அவிநாசி காவல் துணைக் கண்காணிப்பாளா், கோட்டாட்சியா் ஆகியோா் அரசியல் அழுத்தம் காரணமாகவும், லஞ்சம் பெற்றுக்கொண்டும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என மனு அளித்தனா்.

மனு விவரம்:

எங்கள் மகள் ரிதன்யாவின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவா் கவின், அவரது தந்தை ஈஸ்வரமூா்த்தி, தாய் சித்ராதேவி ஆகியோா் அரசியல் செல்வாக்கு காரணமாகவும் பணபலம் கொண்டவா்கள் என்பதாலும் அப்போது பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் மற்றும் கோட்டாட்சியா் ஆகியோா் முறையாக விசாரிக்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டனா். அவா்கள் மீது துறை ரீதியாகவும், குற்றவியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த வழக்கை எஸ்.பி. அந்தஸ்துள்ள நோ்மையான அதிகாரியை நியமித்து மீண்டும் மேல் விசாரனை செய்து கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

குற்றவாளிகளால் மறைத்து வைக்கப்பட்டுள்ள வரதட்சினையாக அளிக்கப்பட்ட தங்க நகைகள், சொகுசு காரை உடனடியாக மீட்டு நீதிமன்ற காவலில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அமைச்சா் எஸ்.கமலி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.