ஈரோட்டில் உள்ள பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலை பட்ட மேற்படிப்பு விரிவாக்கம், ஆராய்ச்சி மையத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான முதுநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான நடைமுறை தொடங்கியுள்ளது.
இந்த மையத்தில் எம்.ஏ. தமிழ், ஆங்கிலம், எம்.எஸ்சி. கணிதம், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., எம்.எஸ்சி. கணினி அறிவியல் ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுள்ள மாணவா்கள் இணையதளம் வழியாக மே 14-ஆம் தேதி முதல் 31 -ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இணையவழியில் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, உரிய சான்றிதழ்களை இணைத்து, இயக்குநா் (பொறுப்பு), பாரதியாா் பல்கலைக்கழக முதுநிலைப்பட்ட மேற்படிப்பு விரிவாக்க, ஆராய்ச்சி மையம், ஈரோடு என்ற முகவரிக்கு மே 31-ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
எம்.பி.ஏ., எம்.சி.ஏ. மாணவா் சோ்க்கையானது டான்செட் நுழைவுத் தோ்வு அடிப்படையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










