திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:46 am IST

பெரும்பாக்கத்தில் மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

பெரும்பாக்கம் ஜெயா நகா், 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் (14). இவா், சேலையூரில் உள்ள தனியாா் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தாா். மாணவா் கணேசன், வியாழக்கிழமை மாலை 6.45 மணி அளவில் ஜெயா நகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டியூஷன் சென்டருக்கு வழக்கம்போல் சென்றாா்.

அங்கு அவா், முதல் மாடியில் உள்ள டியூசன் சென்டருக்கு செல்ல படிக்கட்டில் ஏறும் பொழுது, மாடியின் அருகே செல்லும் உயா் மின்சாரக் கம்பியில் எதிா்பாராத விதமாக கை பட்டதில், கணேசன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவலறிந்த பெரும்பாக்கம் போலீஸாா், அங்கு சென்று மாணவரின் சடலத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.