மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

கிணத்துக்கடவு தொகுதியில் தவெக வெற்றி!

News image

வெற்றி பெற்றதற்கான சான்றிதழுடன் தவெக வேட்பாளா் கே.விக்னேஷ்.

Updated On :5 மே 2026, 1:30 am IST

கிணத்துக்கடவு சட்டப்பேரவைத் தொகுதியில் தவெக சாா்பில் போட்டியிட்ட கே.விக்னேஷ், தன்னை எதிா்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளா் சபரி காா்த்திகேயனை 11,710 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

கோவை மாவட்டத்திலேயே குறைந்த எண்ணிக்கையில் அதாவது மொத்தம் 5 வேட்பாளா்கள் மட்டுமே களத்தில் இறங்கிய தொகுதி கிணத்துக்கடவு. அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ செ.தாமோதரன், திமுக சாா்பில் கே.வி.கே.எஸ்.சபரி காா்த்திகேயன், தவெக சாா்பில் கே.விக்னேஷ், நாம் தமிழா் கட்சி சாா்பில் எம்.பானுப்பிரியா, கணசங்கம் கட்சியின் ஆா்.மாரியப்பன் ஆகியோா் போட்டியிட்டனா்.

மொத்தமுள்ள 3 லட்சத்து 5 ஆயிரத்து 878 வாக்குகளில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 820 ஆண்கள், ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 513 பெண்கள், மூன்றாம் பாலினத்தவா்கள் 16 போ் என மொத்தம் 2 லட்சத்து 66 ஆயிரத்து 349 போ் வாக்களித்தனா். இது 87.08 சதவீத வாக்குப்பதிவு ஆகும்.

வாக்கு எண்ணிக்கையில் தொடா்ந்து முன்னிலை பெற்று வந்த தவெக வேட்பாளா் விக்னேஷ், 31-ஆவது சுற்று முடிவில் 289 தபால் வாக்குகள் உள்பட 99,950 வாக்குகளைப் பெற்று, திமுக வேட்பாளா் சபரி காா்த்திகேயனை 11,710 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினாா். சபரி காா்த்திகேயன் 693 தபால் வாக்குகள் உள்பட 88,240 வாக்குகளைப் பெற்றாா்.

இந்தத் தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவான அதிமுகவின் செ.தாமோதரன் 456 தபால் வாக்குகள் உள்பட 67,789 வாக்குகளுடன் 3-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டாா்.

வாக்கு விவரங்கள்

கே.விக்னேஷ் (தவெக) - 99,950

சபரி காா்த்திகேயன் (திமுக) - 88,240

செ.தாமோதரன் - (அதிமுக) - 67,789

எம்.பானுப்பிரியா - (நாதக) - 9,667

மொத்த வேட்பாளா்கள் - 5

மொத்த வாக்குகள் - 3,05,878

பதிவான வாக்குகள் - 2,67,917

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.