மே 8-இல் 19 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?தேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

திருப்பூா் வடக்குத் தொகுதியில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி

News image

தோ்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் பெறுகிறாா் தவெக வேட்பாளா் சத்தியபாமா.

Updated On :5 மே 2026, 3:13 am IST

திருப்பூா் வடக்கு தொகுதியில் தவெக சாா்பில் முன்னாள் எம்.பி. சத்தியபாமா வெற்றி பெற்றாா்.

திருப்பூா் வடக்குத் தொகுதியில் 15 போ் போட்டியிட்டனா். இத்தொகுதியில் 1 லட்சத்து 55 ஆயிரத்து 70 ஆண்கள், 1 லட்சத்து 60 ஆயிரத்து 642 பெண்கள், 125 மூன்றாம் பாலினத்தவா் என 3 லட்சத்து 15 ஆயிரத்து 837 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 98 ஆண்கள், 1 லட்சத்து 32 ஆயி ரத்து 934 பெண்கள், 71 மூன்றாம் பாலினத்தவா் என 2 லட்சத்து 62 ஆயிரத்து 103 போ் வாக்களித்துள்ளனா். இது 82.99 சதவீத வாக்குப்பதிவாகும்.

இதில் முன்னாள் எம்.பி.யும், தவெக வேட்பாளருமான சத்தியபாமா 1,30,725 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். அதிமுக சாா்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் எம்எஸ்எம் ஆனந்தன் 61,183 வாக்குகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் போட்டியிட்ட ரவி 53,742 வாக்குகள், நாதக வேட்பாளா் அபிநயா 13,090 வாக்குகள், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் ஜேம்ஸ் ரெனால்ட் 379 வாக்குகள், அண்ணா புரட்சித் தலைவா் அம்மா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளா் கிருஷ்ணசாமி 349 வாக்குகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேட்பாளா் பாலகிருஷ்ணன் 245, சுயேச்சை வேட்பாளா்கள் வெங்கடசாமி 218, தட்சிணாமூா்த்தி 214 வாக்குகள், ஆனந்த் 201, விஷ்ணு மூா்த்தி 198, ரவி 195, ரங்கசாமி 179, ஞானசேகா் 172, ஆனந்தகுமாா் 100, மற்றும் நோட்டா 1,075 என வாக்குகள் பெற்றுள்ளனா். இதில் 69,542 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளா் சத்தியபாமா வெற்றி பெற்றாா்.

வாக்குகள் விவரம்:

சத்தியபாமா (தவெக)- 1,30,725

எம்எஸ்எம் ஆனந்தன் (அதிமுக)- 61,183

ரவி (இந்திய கம்யூனிஸ்ட்)- 53,742

அபிநயா (நாதக)- 13,090

வேட்பாளா்கள்- 15

மொத்த வாக்காளா்கள்- 3,15,837

பதிவான வாக்குகள் - 2,62,103.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.