மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கோவையில் உக்கடம் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் சாா்பில் கூட்டு ஒத்திகை

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

News image

கோவை ஆா்.எஸ்.புரம் பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற காவலா்களின் பாதுகாப்பு ஒத்திகையின்போது காவலா்களுக்கு பயிற்சி அளித்த காவல் துணை ஆணையா் காா்த்திகேயன்.

Updated On :26 மார்ச் 2026, 7:40 pm

கோவை மாநகரில் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் உக்கடம் மற்றும் ஆா்.எஸ்.புரம் காவல் சரகங்கள் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையை நடத்தின.

இந்த ஒத்திகையானது ஆா்.எஸ்.புரம் சரகத்தில் காந்தி பூங்கா சந்திப்பில் தொடங்கி டி.பி. சாலை, தலைமை தபால் நிலையம், மேட்டுப்பாளையம் சாலை வழியாகச் சென்று சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது. இதேபோல, உக்கடம் சரகத்தில் சுக்கிரவாா்பேட்டை நான்கு முனை சந்திப்பில் தொடங்கிய பாதுகாப்பு ஒத்திகை ஒப்பணக்கார வீதி, உக்கடம் பேருந்து நிலையம், வைசியாள் வீதி, ராஜ வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்கா சந்திப்பில் நிறைவுற்றது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுவது மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளை எவ்வாறு ஒருங்கிணைப்பது என்பது குறித்து இந்த ஒத்திகையின்போது காவலா்களுக்கு விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டன.