மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோவை வடக்கு: சொன்னாா்களே செய்தாா்களா?

தொகுதி முழுவதுமே சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. அரசுப் பள்ளிகள் பலவற்றில் கழிப்பிட வசதி இல்லை.

News image

கோவை வடக்கு

Updated On :24 மார்ச் 2026, 11:46 pm

கோவை வடக்குத் தொகுதி முழுவதும் குப்பை, கழிவு நீா்க் கால்வாய் மேலாண்மை சரியில்லை. வடவள்ளி, பொம்மணம்பாளையம், மேட்டுக்காடு, ரத்தினபுரி, சாய்பாபா காலனி, கோவில்மேடு பகுதிகளில் சாக்கடைகள் தூா்வாரப்படாமல் உள்ளன. முக்கியமான சாலைகளிலோ சாக்கடைகளில் உள்ள குப்பைகளை அகற்றி அதை சாலையிலேயே குவித்து வைத்திருப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனா். தொகுதி முழுவதுமே சுகாதாரச் சீா்கேடு நிலவுகிறது. அரசுப் பள்ளிகள் பலவற்றில் கழிப்பிட வசதி இல்லை.

முல்லை நகா் முதல் சிறுவாணி வரை சாலை அமைக்கப்பட்டிருந்தாலும் பேருந்து வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படவில்லை. மருதமலை, ஐஓபி காலனி பகுதிகளில் வன விலங்கு தொல்லை கட்டுப்படுத்தப்படவில்லை. சத்தி சாலையில் கணபதி பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகம், சட்டக் கல்லூரிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையான லாலி ரோட்டை சீரமைத்து, எழில் மிக்க சாலையாக்கி போக்குவரத்தை எளிதாக்கி இருக்க வேண்டும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் இந்தப் பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் சரி செய்ய முயற்சிப்போம்.

- கோ.நா்மதா, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.