தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

அரசுப் பள்ளியில் ஜாதிய ரீதியிலான தாக்குதல்: பள்ளி மாணவி மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

பள்ளி மாணவி, அவரது குடும்பத்தினா் மீது ஜாதிய வன்கொடுமை தாக்குதல் புகாா்

News image

அரசுப் பள்ளி மாணவி மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த பல்வேறு சங்கத்தினா்.

Updated On :19 மார்ச் 2026, 11:30 pm

கோவை மாவட்டம், சூலூா் அருகே உள்ள பீடம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவி மற்றும் அவரது குடும்பத்தினா் மீது சக மாணவனின் குடும்பத்தினா் ஜாதிய ரீதியிலான தாக்குதல் நடத்தியதாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மேற்கு மண்டல ஐ.ஜி. ஆகியோரிடம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம், எஸ்.சி., எஸ்.டி. நலக்குழு உறுப்பினா்கள், இந்திய மாணவா் சங்கத்தினா் மற்றும் மாதா் சங்கத்தினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

பட்டணம் அருகேயுள்ள இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த ஆதிதிராவிடா் (அருந்ததியா்) சமுதாயத்தைச் சோ்ந்த மாணவி தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். ஆனால், அதே வகுப்பில் பயிலும் மாற்றொரு சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே பெற்றதோடு, அதை அதிக மதிப்பெண்கள் பெற்ாக தானாகவே திருத்தம் செய்துள்ளாா்.

இதையறிந்த அந்த மாணவி, இதுகுறித்து ஆசிரியரிடம் கூறியுள்ளாா். ஆசிரியா்கள் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாணவா் அடிக்கடி அந்த மாணவியை திட்டி வந்துள்ளாா்.

இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவியை, மாணவரும், அவரது பெற்றோரும் தகாத வாா்த்தைகளால் திட்டியுள்ளனா். இதைத் தட்டிக் கேட்ட மாணவி, அவரது தாத்தா மற்றும் தாய் ஆகியோரை மாணவரின் குடும்பத்தினா் ஜாதிப் பெயரைக் கூறி தாக்கியுள்ளனா். காயமடைந்த மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

புகாா் அளிக்கப்பட்டு 2 நாள்களாகியும் தாக்குதல் நடத்தியவா்கள் மீது காவல் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தாக்குதல் நடத்திய மாணவா், அவரது தாய் ஆகியோா் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.