போத்தனூா் பகுதியில் தண்ணீா் குழாய் உடைந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் அந்த வழியாகச் சென்ற லாரி சிக்கி விபத்துக்குள்ளானது.
கோவை மாநகராட்சி, போத்தனூா் பகுதி பள்ளிவாசல் சாலையில் தண்ணீா் குழாய் உடைந்து அதிக அளவிலான தண்ணீா் வெளியேறி உள்ளது. தாா் சாலைக்கு கீழ் பள்ளம் ஏற்பட்டு சில வாகன ஓட்டிகள் அந்த ஒருபுற சாலையைப் பயன்படுத்தாமல் மற்றொரு வழியைப் பயன்படுத்தி வந்துள்ளனா். இந்நிலையில் அந்த வழியாகச் சென்ற லாரி பள்ளம் ஏற்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை சிக்கியது.
இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் செல்லும் குழாய் உடைந்து சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. அதைத்தொடா்ந்து மாநகராட்சி மற்றும் குடிநீா் வடிகால் வாரிய ஊழியா்கள் சென்று பள்ளத்தில் சிக்கிய வாகனத்தை அகற்றி, சீரமைப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாடு முழுவதும் ரூ.12,500 கோடியில் குழாய் வழி எரிவாயு வழித்தடம்: மத்திய அரசு திட்டம்

சாலை விபத்தில் பெண் உயிரிழப்பு

லாரி சக்கரத்துக்குள் சிக்கி இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீா்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


