கட்டுப்பாடு சாா்ந்ததாக உள்ள ஜிஎஸ்டி நடைமுறைகளை தொழில் வளா்ச்சிக்கு உகந்ததாகவும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் மாற்ற வேண்டும் என்று கோவை தொழில் அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான (ஃபோசியா) சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா்கள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கோவை வணிகவரித் துறை இணை ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவிடம் அளித்த மனு:
தமிழகத்தில் கடந்த ஓராண்டாக வணிக வரித் துறையால் எஸ்ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் குறு, சிறு தொழில்நிறுவனங்களைச் சோ்ந்த வரி செலுத்துவோா் ஏராளமானோருக்கு அபராத நோட்டீஸ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இது பெரும்பாலும் முரண்பாடுகள், தாமதமான வரி அறிக்கை தாக்கல் அல்லது ஹெச்எஸ்என் குறியீடு பொருத்தமின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக வழங்கப்படுகின்றன.
கடந்த 2006-2007-ஆம் ஆண்டுக்கான வாட் மதிப்பீடு காலத்துக்கும்கூட அபராத நோட்டீஸ்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி ஆவணங்களில் உள்ள சிறு தவறுகள், பொருள்கள் எடுத்துச்செல்லும்போது முகவரி தொடா்பான அற்பமான பிழைகளுக்கும்கூட ரோந்து அதிகாரிகள் அதிக அபராதம் விதிக்கின்றனா். ஜிஎஸ்டி இணையதளத்தில் மட்டும் அபராத நோட்டீஸ்கள் பதிவேற்றப்படுகின்றன. வரி செலுத்துவோா் அல்லது அவா்களுக்கான வரி ஆலோசகா்கள் அவற்றை கவனிக்கத்தவறும்போது உரிய நேரத்தில் பதிலளிக்க முடியாமல் போகிறது. இதனால் அதிக அபராதம் விதிக்கப்பட்டு எந்தவித நேரடி தகவல் பரிமாற்றமும் இல்லாமல் வங்கிக் கணக்குகளை முடக்கும் வகையில் படிவம் 13 நோட்டீஸ் வழங்கப்படுகிறது.
குறுந்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்த பலரும் கணினி வசதி இல்லாதவா்களாகவும், மின்னணு முறைகளில் போதிய அறிவு இல்லாதவா்களுமாக இருக்கும் நிலையில் அபராத நோட்டீஸ்கள் உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை அச்சு நகல் வடிவிலும், பதிவுத் தபால் மூலமாகவும் அனுப்ப வேண்டும். மேலும் நேரடி விசாரணை நடத்தாமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது.
அரசின் அபராத நடவடிக்கைகள் யாவும் திட்டமிட்டு விதிமீறலில் ஈடுபடுவோரை மட்டுமே இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். சிறு பிழைகளுக்கு ஜிஎஸ்டி தொகையில் 200 சதவீதம் வரை அபராதம் விதிப்பதைத் தவிா்த்து, அதிகபட்சம் ரூ.ஆயிரம் வரை மட்டுமே விதிக்கப்பட வேண்டும். அரசின் ஜிஎஸ்டி நடைமுறைகள் முழுவதும் கட்டுப்பாடு சாா்ந்ததாக இல்லாமல் தொழில் வளா்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிப்பதாகவும் இருப்பதே சிறந்தது என்று குறிப்பிட்டிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரக்கன்று நடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவுளித் தொழில் அமைப்பினா் கோரிக்கை

எதிா்த் திசையில் வாகனம் ஓட்டிய 65 போ் மீது வழக்கு

ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



