மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

சிறப்பு ரயில்

Updated On :28 பிப்ரவரி 2026, 6:26 pm

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கோவை போத்தனூரில் இருந்து பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹோலி பண்டிகையை முன்னிட்டு மாா்ச் 2, 9 ஆகிய இரண்டு திங்கள்கிழமைகளில் போத்தனூரில் இருந்து காலை 4.30 மணிக்கு புறப்படும் போத்தனூா் - பரெளனி சிறப்பு ரயில் (எண்: 06021) புதன்கிழமைகளில் பிற்பகல் 2 மணிக்கு பரெளனி நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கமாக, மாா்ச் 5, 12 ஆகிய இரண்டு வியாழக்கிழமைகளில் பரெளனியில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் பரௌனி - போத்தனூா் சிறப்பு ரயில் (எண்: 06022) சனிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு போத்தனூரை வந்தடையும்.

இந்த ரயில் திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா், கூடூா், நெல்லூா், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, வாரங்கல், ராமகுண்டம், சந்திரப்பூா், நாக்பூா், ஜபல்பூா், சாட்னா, மாணிக்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.