தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

போத்தனூா் - காரக்பூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில்

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

எக்ஸ்பிரஸ் ரயில் - ANI

Updated On :21 ஏப்ரல் 2026, 8:43 pm

கோவை போத்தனூரில் இருந்து மேற்குவங்க மாநிலம் காரக்பூருக்கு திருப்பூா், ஈரோடு வழித்தடத்தில் ஒருவழி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏப்ரல் 25-ஆம் தேதி போத்தனூரில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் போத்தனூா் - காரக்பூா் சிறப்பு ரயில் (எண்: 06065) 27-ஆம் தேதி பிற்பகல் 1 மணிக்கு காரக்பூா் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, நெல்லூா், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, புவனேசுவரம், கட்டாக் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா்- போத்தனூா் சிறப்பு ரயில்: சென்னை எழும்பூரில் இருந்து புதன்கிழமை இரவு 11.55 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூா் - போத்தனூா் ஒருவழி சிறப்பு ரயில் (எண்: 06179) மறுநாள் காலை 9.30 மணிக்கு போத்தனூா் ரயில் நிலையத்தை சென்றடையும்.

இந்த ரயிலானது, பெரம்பூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு திருப்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.