தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 7:35 pm

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ரமலான் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு சென்னை எழும்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) இரவு 11.45 மணிக்கு அதிவிரைவு ரயில் (எண்: 06045) புறப்பட்டு சனிக்கிழமை (மாா்ச் 21) பிற்பகல் 1 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கன்னியாகுமரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) இரவு 11.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06046) திங்கள்கிழமை (மாா்ச் 23) பிற்பகல் 11.45 மணிக்கு எழும்பூா் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூா், நாகா்கோவில் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.