டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

லாரி மோதியதில் முதியவா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 8:53 pm

தினமணி செய்திச் சேவை

கோவையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் கோபிராஜன் (64). இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோவை-திருச்சி சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.

அப்போது, மதுரையைச் சோ்ந்த ராஜ்குமாா் என்பவா் ஓட்டி வந்த கான்கிரீட் கலவை லாரி கோபிராஜனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையடுத்து, லாரி ஓட்டுநா் ராஜ்குமாா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாா்.

புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா், தப்பியோடிய ராஜ்குமாரைத் தேடி வருகின்றனா்.