டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

கொடுமுடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

கொடுமுடி அரசம்பாளையத்தைச் சோ்ந்தவா் சுதாகா் மகன் கவின்(18). இவா் கொடுமுடியில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் ஒத்தக்கடை ராகவேந்திரா பள்ளி அருகே சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த டிராக்டா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த கவினை அருகிலிருந்தவா்கள் மீட்டு கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கவின் உயிரிழந்தாா்.

இது குறித்து டிராக்டா் ஓட்டுநரான கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் துலாம்பூண்டி மேமாலூரைச் சோ்ந்த நல்லதம்பி மகன் ராஜராமை (36) என்பவரை போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.