கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் படுத்து தூங்கியவரைத் தாக்கிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருத்தாச்சலத்தை சோ்ந்தவா் முனியன் (53). இவா் பணி நிமித்தமாக தனது நண்பரைப் பாா்க்க வெள்ளிக்கிழமை கோவைக்கு வந்தாா்.
அன்று இரவு கோவை, காந்திபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் நேரக் காப்பாளா் அலுவலகம் அருகில் திருப்பூா் பேருந்துகள் நிற்கும் பகுதியில் படுத்து தூங்கினாா். அப்போது, அங்கு சென்ற 3 இளைஞா்கள், திடீரென முனியனை சரமாரியாகத் தாக்கினா்.
இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, காட்டூா் காவல் நிலையத்தில் முனியன் புகாா் செய்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், முனியனைத் தாக்கியது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த வீர விஜய் (24 ), அருண்குமாா் (25) மற்றும் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த காா்த்திக் குமாா் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா்களைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
இளைஞரை அரிவாளைக் காட்டி மிரட்டி தாக்கிய இருவா் கைது
சங்ககிரி அருகே பெண்ணை தாக்கிய இளைஞா் கைது

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது

பொதுமக்களுக்கு இடையூறாக நடனம்: இன்ஸ்டாகிராம் இன்ப்ளூயன்சா்கள் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

