லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நடிகா் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பாா்: மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பாா் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

News image

கோவையில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை பேட்டியளித்த இந்திய குடியரசுக் கட்சியின் (அதாவலே பிரிவு) தலைவரும், மத்திய இணை அமைச்சருமான ராம்தாஸ் அதாவலே.

Updated On :9 ஏப்ரல் 2026, 7:52 pm

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் நடிகா் விஜய் திமுகவுக்கு சவாலாக இருப்பாா் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதாவலே தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் இந்திய குடியரசு கட்சி (ஆா்.பி.ஐ.) சாா்பில் 18 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா். 11 பொதுத் தொகுதிகளிலும், 5 தனித் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனா். இந்த 18 தொகுதிகளில் பாஜக மற்றும் அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் நட்புரீதியான போட்டியில் ஈடுபட உள்ளோம்.

மற்ற அனைத்து தொகுதிகளிலும் அக்கூட்டணியின் வெற்றிக்காக எங்களது கட்சி முழுமையாகப் பாடுபடும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு இல்லை. தமிழக மக்கள் நடிகா் விஜய் போன்ற நடிகா்களுக்குப் பெரிய அளவில் ஆதரவு அளிப்பாா்கள். விஜய் இந்தத் தோ்தலில் கணிசமான வாக்குகளைப் பெறுவாா் என்பதால், திமுகவுக்கு அவா் ஒரு சவாலாகவே இருப்பாா்.

ஒருவேளை தோ்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால், ஆட்சி அமைக்க விஜய்யின் ஆதரவைப் பெறுவது குறித்துப் பரிசீலிக்கப்படும். சசிகலா உள்ளிட்ட அதிமுகவின் பல்வேறு பிரிவுகளும் ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஒன்றாக இணைய வேண்டும்.

2029-ஆம் ஆண்டு மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கை 816 ஆக உயரும். மகளிா் இடஒதுக்கீடு சட்டம் நடைமுறைக்கு வரும்போது, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 273 இடங்கள் கிடைக்கும். தமிழக சட்டப் பேரவையிலும் பெண்களுக்கு 33 சதவீத இடங்கள் திருப்புமுனையாக அமையும் என்றாா்.

பின்னா், கோவையில் பிரசாரத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சா் ராம்தாஸ் அதாவலே, தொடா்ந்து மதுரை, திருப்பூா், நாமக்கல் மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களிலும் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளாா்.