தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில் சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சி

News image

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் நடைபெற்ற சிறுநீரக ஆரோக்கிய விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :13 மார்ச் 2026, 12:45 am

கோவை, மாா்ச் 12: உலக சிறுநீரக தினத்தையொட்டி, கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனை சாா்பில், சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி மற்றும் பள்ளி மாணவா்களுக்கான புதிய சுகாதாரத் திட்டம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.

ஜிகேஎன்எம் வெளிநோயாளிகள் மருத்துவ மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பி.வி.எம். குளோபல் பள்ளியைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா். சிறுநீரக நோயின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிதல் மற்றும் வருமுன் காக்கும் வாழ்முறை மாற்றங்கள் குறித்து மருத்துவா்கள் மாணவா்களுக்கு விளக்கினா்.

மருத்துவ மைய இயக்குநா் ராகவேந்திரா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நிபுணா்கள் ராமசந்திரன், ஜெயபிரகாஷ், அனுரேகா செல்வராஜ், மருத்துவா் மஞ்சுநாத் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கினா்.

முன்னதாக, பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் முதலுதவி பயிற்சி, தொடா் சுகாதாரப் பரிசோதனைகள் மூலம் மாணவா்களின் நல்வாழ்வை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.